பாகிஸ்தான் அணுகுண்டு பதுக்கி வைத்த இடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதுவா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

பாகிஸ்தான் அணுகுண்டை பதுக்கி வைத்த இடத்தில் இந்தியா நடத்திய தாக்குதலின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மாலை பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஓஹோ இதுதான் அதுவா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத்தகவலில், “

*கிரானா மலை 😘 அணுகுண்டை பதுக்கி வைத்து பாதுகாக்கும் பாகிஸ்தானில் இருக்கும் இடம். அதன் வாசலில் துல்லியமாகத் தாக்கி உலகிற்கே எச்சரிக்கை தந்த இந்தியா. இதைத்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறினார்கள்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

உண்மை அறிவோம்:

பாகிஸ்தானின் அணுசக்தி மையம் மற்றும் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே இந்தியா தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டு பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இப்படிப் பரவும் வீடியோக்களை ஆய்வு செய்தால் அவை பழையதாக அல்லது மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் எடுக்கப்பட்டதாக உள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் வீடியோ உண்மையானதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இதுவும் மத்திய கிழக்குப் பகுதி வீடியோ என்பது தெரியவந்தது. 2015ம் ஆண்டில் ஏமன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது இந்த வீடியோ பதிவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் நுகூம் மலை வெடிப்பு (Nuqoum Mountain explosions) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தேடிய போது 2015ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி ஏமன் எல்லைப் பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணிப் படைகள்  தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

2015ம் ஆண்டு ஏமன் நாட்டில் நடந்த தாக்குதல் வீடியோவை எடுத்து 2025ல் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் உள்ள இடத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஏமன் நாட்டின் மீது 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோவை பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வீடியோ என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பாகிஸ்தான் அணுகுண்டு பதுக்கி வைத்த இடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதுவா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply