வங்கியில் பணம் எடுக்க திரண்ட பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’வங்கியில் பணம் எடுக்க திரண்ட பாகிஸ்தான் மக்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கின்ற போர் பீதியில்…

 பாகிஸ்தான் மக்கள் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்தனர்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், தற்போதைய பாகிஸ்தான் – இந்தியா மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது. 

கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அமெரிக்க பாதுகாப்புப் படையினரை முழுவதும் திரும்பப் பெறுவதாக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். 

இதன்பேரில், 2021, ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கர்கள், 90 சதவீதம் பேர் வெளியேறினர். மறுபுறம், தலிபான்கள் நேரடியாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரை தாக்கி, பல்வேறு இடங்களை தங்கள் வசம் நிர்வகிக்க தொடங்கினர். படிப்படியாக, முன்னேறிய தலிபான்கள் ஆகஸ்ட் 15, 2025 அன்று, தலைநகர் காபூலை கைப்பற்றினர். இதனால் பீதியடைந்த பொதுமக்கள், அன்றைய ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டு மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆப்கானிஸ்தானில் இருந்து, தப்பித்து ஓடினர். இதன்போது, அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கன் அதிபர் அஸ்ரஃப் கனி, நாட்டைவிட்டு ஓடியதால், ஆப்கன் அரசு நிலைகுலைந்தது. 

கேட்பாரற்ற நிலையில், தலிபான்கள் மீண்டும் ஆப்கனில் ஆட்சி நடத்த தொடங்கினர். இதையொட்டி, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்தனர். அதில் ஒன்றாக, ஆப்கன் மக்கள், வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இதன்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் திரண்டனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் ஒன்றைத்தான், தற்போது சமூக வலைதளங்களில் மறுபகிர்வு செய்கிறார்கள், என்று தெளிவாகிறது.  

கூடுதல் செய்தி ஆதாரம்…

Link 1 l Link 2 l Link 3

எனவே, 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:வங்கியில் பணம் எடுக்க திரண்ட பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer  

Result: False

Leave a Reply