
‘‘டாஸ்மாக் வரும் வடக்கன்களுக்கு, வழி காட்ட இந்தியில் போர்டு வைத்துள்ள திராவிட மாடல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இந்தி எதிர்ப்புன்னு சொல்லி மைல்கல்ல இருந்த இந்தி எழுத்தை எல்லாம் அழிச்சிட்டு இப்ப குடிக்க வர்ற வடக்கன் வழி தெரியாம போயிடக்கூடாதுன்னு டாஸ்மாக்கு இந்தியில போர்டு வச்சிங்க பாரு இதான்டா திராவிட மாடல்! காசு பணம் துட்டு மணி மணி நைனா
வருமானம் வரும் என்றால் கொள்கையாவது மயிராவது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2024ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், உடனடியாக இந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டுவிட்டது என்றும் தெரியவந்தது.

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு இதுபற்றி மறுப்பு வெளியிட்டுள்ளது.
https://x.com/tn_factcheck/status/2013869609980457013 Embed
இதன்படி, 2024ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டி என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சர்ச்சை ஏற்பட்டதால், அந்த பலகை உடனே நீக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மை தெரியாமல், பழைய புகைப்படத்தை புதியது போன்று குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:டாஸ்மாக் வழி காட்ட இந்தியில் போர்டு வைக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


