
‘‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ எங்கோ ஒரு மூளையில் பகுத்தறிவு வகுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கோ எவனோ பார்ப்பணியத்திற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருப்பான்… 🤭
யாருங்க அது சொம்பு தூக்கறது?
இவரை தெரியாதா? இவர் தான் தமிழ்நாட்டின் எலான் மாஸ்க் 🥰
மாப்பிள்ளை சார் ❤,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், சபரீசன் கையில் சொம்பு உள்ளது போன்று வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தெரியவந்தது.

ஆம், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 03 அன்று ”திருச்செந்தூர்: சிறப்பு யாகம்… பக்தர்களுக்கு மறுப்பு; சபரீசனுக்கு மட்டும் அனுமதியா?- பாஜக கேள்வி’’ என்று ஒரு செய்தி கட்டுரை விகடனில் வெளியானது. அதில், நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், சபரீசன் கையில் சொம்பு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
Vikatan Link l Samayam Tamil Link
எனவே, பழைய புகைப்படத்தை எடுத்து, சபரீசன் கையில் சொம்பு உள்ளது போன்று எடிட் செய்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:‘சொம்பு தூக்கும் தமிழ்நாட்டின் மாப்பிள்ளை சார்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


