
‘’ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஈவேரா வை செருப்பால் அடித்த மே 17 இயக்க போராட்ட வாதிகள் மற்றும் பெறியாரிஸ்ட்கள்.
என்னையா #Thirumurugan_Gandhi குடிபோதையில் நடந்த போராட்டமா ?’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
இதன்படி, ‘நான் கெட்டவன் இல்லை, கேடு கெட்டவன்’ என்ற வாசகம் இடம்பெற்ற சீமான் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, அதனை பெரியாரிய ஆதரவாளர்கள் செருப்பால் அடிப்பது போன்ற படம்தான் உண்மை. இதனை நாம் தமிழர் கட்சியினர் வேண்டுமென்றே எடிட் செய்து, வதந்தி பரப்புவதாகக் குறிப்பிட்டு, திமுக ஆதரவாளர்கள் X வலைதளத்தில் பதிவிட்டுள்ளதைக் கண்டோம்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Oneindia Tamil l Peralai l Polimer News
உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
