மோடி தமிழ்நாடு வந்தால் நானே நேரில் வரவேற்பேன் என்று சீமான் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பிரதமர் மோடி தமிழகம் வந்தால் நானே அவரை நேரில் வரவேற்பேன் என்று சீமான் பேச்சு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இது பகிரப்படுவதைக் கண்டோம். 

Claim Tweet Link l Archived Link 

உண்மை அறிவோம்: 

பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க நேரில் வந்திருந்தார். அப்போது அவரை வரவேற்று சரியான முறையில் திமுக அரசு செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தமிழ்நாடு அரசு தரப்பில் வைக்கப்பட்ட பேனர்கள் பலவற்றில் அவரது உருவப்படம் கூட இடம்பெறவில்லை என்றும் பாஜக தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. 

puthiyathalaimurai link 

இந்த சூழலில், மோடியின் உருவப்படம் இன்றி தமிழ்நாடு அரசு பேனர் வைத்தது தவறு, என்று அப்போது சீமான் கூறியிருந்தார். இதன்பேரில் திமுக ஆதரவாளர்கள் அவரை கண்டிக்கவும் செய்தனர்.

இதையொட்டியே, மேற்கண்ட வகையில் சிலர் தந்தி டிவி லோகோவை இணைத்து, போலியான செய்தியை பரப்புகின்றனர். உண்மையில், சீமான் இப்படி பேசவில்லை. இதுபற்றி நாம் தமிழர் கட்சி தரப்பிலும், தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 


முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மோடி தமிழ்நாடு வந்தால் நானே நேரில் வரவேற்பேன் என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False