
‘’கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்…
#திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும்,” என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் பெண் ஒருவரை சிலர் மரத்தில் கட்டி வைத்து, தாக்குவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ கிடையாது என்றும், ஆந்திராவில் நிகழ்ந்த சம்பவம் என்றும் தெரியவந்தது.
ஆந்திர மாநிலம், குப்பம் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் திம்மராயப்பா என்ற நபர் வாங்கிய ரூ.80,000 பணத்தை வட்டியுடன் உடனே திருப்பித்தர கேட்டு, அவரது மனைவி சிரிஷாவை கடன்காரர்கள், மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை தங்கள் தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற கிராம மக்களையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை மற்றும் அவரது குழந்தைகளின் கல்விக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
News18 Telugu l Samayam Telugu l New Indian Express l India Today
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான TN Factcheck விளக்கம் அளித்துள்ளது.
எனவே, ஆந்திராவில் நடந்த சம்பவம் ஒன்றை எடுத்து, தமிழ்நாட்டில் நடந்தது போன்று வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
