
‘’மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்,’’ என்று பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் உண்மை போல பகிர்வதையும் கண்டோம்.
Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்திகள் பல பகிரப்படுகின்றன. நாமும் அவை பற்றி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு செய்திதான் மேலே நாம் கண்ட நியூஸ் கார்டும்.
உண்மையில் இதனை கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே, இதனை உண்மை என நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை- மோடிக்கு கடிதம் எழுதினாரா அண்ணாமலை?
Fact Check By: Pankaj IyerResult: False
