மார்த்தாண்டத்தில் டிராஃபிக் ஜாம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மார்த்தாண்டத்தில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீனாவில் ஏற்பட்ட மிக நீண்ட நேர டிராஃபிக் ஜாம் என்று பரவிய வீடியோவின் ஒரு காட்சியை மட்டும் புகைப்படமாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். ஆனால், நிலைத் தகவலில், “மார்த்தாண்டம் ல பயங்கர

டிராபிக் (traffic) jam..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சீனாவில் எட்டு நாள் தேசிய விடுமுறையைத் தொடர்ந்து அன்ஹுயி மாகாணத்தின் (Anhui province) மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் உள்ள 36 பாதைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக வீடியோவுடன் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்த வீடியோவின் காட்சியை எடுத்து மார்த்தாண்டம், மதுரை என்று தமிழ்நாட்டின் சில பகுதிகளைக் குறிப்பிட்டு அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

இதையும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே, இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். மார்த்தாண்டத்திலோ, மதுரையிலோ இவ்வளவு பெரிய டோல்கேட் இல்லை. அதுமட்டுமின்றி, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சற்று பெரிதாக்கிப் பார்த்தாலே டோல்கேட்-ல் சீன மொழியில் எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதுவே இந்த புகைப்படம் சீனாவைச் சார்ந்தது என்பதை உறுதி செய்தன.

Archive

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சீனாவின் போக்குவரத்து நெரிசல் என்று சர்வதேச ஊடகங்கள் முதல் தமிழ்நாட்டின் ஊடகங்கள் வரையில் இந்த புகைப்படம் இடம் பெற்றிருந்த வீடியோக்களை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.

முடிவு:

சீனாவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தமிழ்நாட்டின் மார்த்தாண்டத்தில் ஏற்பட்ட டிராஃபிக் ஜாம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:மார்த்தாண்டத்தில் டிராஃபிக் ஜாம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply