‘‘டெல்லியில் போலீஸ் அதிகாரியை அடித்து, உதைத்த முஸ்லீம்கள்’’ என்று கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ டெல்லியில் நடுரோட்டில் தொழுது கொண்டிருந்த முஸ்லிமை அடித்து உதைத்த போலீஸ்காரர் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் ஆயிரக்கணக்கான போலீசார் முன்னிலையில் அந்த போலீஸ்காரரை அடித்து உதைக்கும் இஸ்லாமியர்களின் வன்முறையை பாருங்கள் எவ்வளவு தூரம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற வகுப்புவாத திருப்திப்படுத்தும் கட்சிகள் இந்துக்களின் ஒருதலைப்பட்ச மதச்சார்பின்மை மதிப்பை சாதகமாக்கிக் கொண்டன. சாலையில் தொழுகை நடத்துவது சட்ட விரோதமான குற்றச் செயல் என்பதை ஒரு முஸ்லிம் தலைவராவது அவர்களுக்குப் புரியவைக்க முன் வந்தாரா? இந்துக்களே, இந்த வீடியோ உங்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை மட்டுமே, மத்தியில் பாஜக ஆட்சி செய்கிறது அவர்களால் முடியும்! ஆனால், முஸ்லிம்களுக்கு சட்டம் இயற்றும் கட்சிகளால் கடும்போக்கு வகுப்புவாதிகள் ஆட்சி செய்தால், இந்தியா மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாறாமல் இருக்க, வாக்குச் சாவடிக்குச் சென்று இந்த வகுப்புவாதிகளுக்கு எதிராக வாக்களியுங்கள். நாம் வாக்களிக்கவில்லை என்றால், இந்த வகுப்புவாத பயங்கரவாதிகளுக்கு எல்லாம் எளிதாகிவிடும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று தகவல் தேடினோம். கடந்த மார்ச் 8, 2024 அன்று டெல்லியில் உள்ள இந்தர்லோக் என்ற இடத்தில், ‘சாலை நடுவே தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்களை அடித்து உதைத்த போலீஸ்காரர்’ என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதால் இவ்வாறு செய்ய நேரிட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், பெரும் சர்ச்சை எழுந்ததால், இதன்பேரில் விசாரணை நடத்திய டெல்லி வடக்கு மாவட்ட போலீசார், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்வதாக, அறிவித்தனர்.

indianexpress link l hindustantimes link

அதேசமயம், இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பற்றி விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும்படி டெல்லி வடக்கு மாவட்ட போலீஸ் கமிஷனருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் தோமர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட போது, அவரை அங்கிருந்த முஸ்லீம் மக்கள் முற்றுகையிட்டு, அடித்து உதைத்ததாக, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகிறார்கள்.

The Wire Link

தமிழ் மட்டுமன்றி இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் இந்த தகவல் பகிரப்படுகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் இவ்வாறு தாக்கப்படவில்லை என்றும், இந்தர்லோக் பகுதியில் மார்ச் 8ம் தேதி முஸ்லீம் மக்கள் போராட்டம் நடத்தியபோது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காட்சியே இது என்றும் டெல்லி வடக்கு மாவட்ட போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில செய்தி ஆதாரங்கள் இதோ…

The Hindu Link l ABPlive Link

எனவே, டெல்லி இந்தர்லோக் பகுதியில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காட்சியை எடுத்து, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை முஸ்லீம்கள் தாக்குவதாகக் கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘டெல்லியில் போலீஸ் அதிகாரியை தாக்கிய முஸ்லீம்கள்’ என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading