பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்ட இந்து குடும்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’புனேவில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்து குடும்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்டதற்காக இன்று புனேவின் பவானி பேத் குருநானக் நகரில் ஒரு இந்து குடும்பம் தாக்கப்பட்டது.* 

*ஒரு இந்து கூட உதவிக்கு வரவில்லை; எல்லாம் முடிந்த பிறகுதான் போலீஸ் மார்ஷல் கூட வந்தார்.*

*இதை அதிகம் பகிருங்கள், அனைத்து ஜிஹாதிகளும் கைது செய்யப்பட வேண்டும்.*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதற்கும், சமீபத்திய பாஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. 

இதன்படி, புனே நகரின் Bhawani Peth என்ற பகுதியில் உள்ள Kashiwadi – Gurunanak Nagar என்ற இடத்தில் ஹாரன் அடித்தது தொடர்பாக, ஒரு குடும்பத்தினரை முற்றுகையிட்டு, மற்றொரு தரப்பு கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதியன்று நடந்துள்ளது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Link 1 l Link 2 l Link 3 l Link 4 l Link 5 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக Khadak போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட சோயப் என்பவரை கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, தாக்குதல் நடத்திய சோயப் முஸ்லீம் ஆவார். பாதிக்கப்பட்ட கரண் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்துக்கள். மற்றபடி, இதற்கு காஷ்மீர் விவகாரம் எதுவும் காரணம் கிடையாது. இதுதொடர்பாக, Khadak போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

இதுதவிர, சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான FIR நகல் நமக்குக் கிடைத்தது. அதில் எந்த இடத்திலும், இது தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவம் என்று கூறப்படவில்லை. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:பாகிஸ்தானுக்கு எதிராக பதிவிட்ட இந்து குடும்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading