‘’எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலமாக வருத்தம் தெரிவித்த அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை - இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்திருந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனதுபேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்,‘’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இது போலியான செய்தி; ஏற்கனவே, எங்களது சமூக வலைதள பக்கங்களில் இதுதொடர்பாக மறுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறோம்,’’ என்றனர்.

இதன்பேரில் அவர்களது ஃபேஸ்புக் கணக்கில் வெளியான அதிகாரப்பூர்வ பதிவை ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் இதுபற்றி அதிமுக மற்றும் பாஜக ஐ.டி., பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:எடப்பாடி பழனிச்சாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா அண்ணாமலை?

Written By: Fact Crescendo Team

Result: False