
‘’ அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தமிழக பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக பிரத்யேகமாக தயாராகும் 200 கிலோ “பீஃப் பிரியாணி”. கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் கலைஞர்களைக் கொண்டு தயாராகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவரை கேலி செய்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலர் தகவல் பரப்புகின்றனர்.
இந்த வரிசையில் பகிரப்படும் வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள தந்தி டிவி லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டும்…
ஆம், ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை’’ என்று தந்தி டிவி தரப்பில் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
உண்மையான செய்தியுடன் போலியான செய்தியை ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…
Written By: Fact Crescendo TeamResult: ALTERED
