
‘’தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா குற்றச்சாட்டு,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்று பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுகிறது. இதையொட்டி நிதி பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டது. 2 பட்ஜெட்களுக்கும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்படும் சூழலில், இதில் கோமாதாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று எச்.ராஜா கூறியதாக, மேற்கண்ட வகையில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், அவர் இப்படி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரது ட்விட்டர் பக்கத்தில் வேறு விதமாக, பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்துள்ளதைக் கண்டோம்.
இதுபற்றி கதிர் நியூஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, எச்.ராஜாவை பகடி செய்யும் வகையில் மேற்கண்ட நியூஸ் கார்டை சிலர் தயாரித்து பகிர்ந்துள்ளனர். அதனையே சிலர் உண்மையென நம்பி பகிர்வதால், சமூக வலைதள பயனாளர்கள் குழப்பமடைவதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் கோமாதாவுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எச்.ராஜா கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
