‘’நிர்மலா சீதாராமன் ஊட்டி மலை ரயில் டிக்கெட் விலை உயர்வு பற்றி விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

மேற்கண்ட செய்தியை நமது வாசகர்கள் சிலர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். எனவே, இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது, ஃபேஸ்புக் வாசகர்கள் பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண முடிந்தது.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டில், புதிய தலைமுறை லோகோ இடம்பெற்றுள்ளதால், பார்ப்பதற்கு புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட உண்மையான செய்தி போலவே உள்ளது.

அந்த கார்டில், ‘’ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்பட வேண்டும்?- மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்,’’ என எழுதப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை நிர்மலா சீதாராமன் இப்படி பேசியுள்ளாரா அல்லது புதிய தலைமுறை இப்படி செய்தி வெளியிட்டதா என சந்தேகம் எழுந்தது.

முதலில், ‘’ஊட்டி மலை ரயில் டிக்கெட் ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; தனியார் மயமாக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி பரவும் தகவலில் உண்மையில்லை. இதுபற்றி நாம் ஏற்கனவே விரிவான உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவை சமர்ப்பித்துள்ளோம்.

FactCrescendo Tamil Link

எனவே, ஊட்டி மலை ரயில் பற்றி பகிரப்படும் தகவலே தவறானது எனும் சூழலில், அதுபற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியிருக்க வாய்ப்பில்லை என்று தெளிவாகிறது.

இதையடுத்து, புதிய தலைமுறை ஆசிரியர்கள் குழு தரப்பில் இதுபற்றி விளக்கம் கேட்க முயன்றபோது, இது போலியான செய்தி என்று கூறி ஏற்கனவே, ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இதன்பேரில், அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று இப்படி ஏதேனும் மறுப்பு வெளியாகியுள்ளதா என தேடினோம். அப்போது, விவரம் கிடைத்தது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Puthiyathalaimurai FB Post LinkArchived Link

எனவே, புதிய தலைமுறை பெயரில் வேண்டுமென்றே போலிச் செய்தியை சிலர் தயாரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஊட்டி மலை ரயில் சர்ச்சை; நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் போலிச் செய்தி!

Fact Check By: Pankaj Iyer

Result: False