
‘’குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்…
இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா இந்த காவல் துறை…
குழந்தையை அழ வைத்து பெற்றோர்களை அவமானம் செய்வது தான் காவல் துறையின் பணியா? 😡😡😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுதொடர்பாக, Cuddalore District Police தரப்பில் ஏற்கனவே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதைக் கண்டோம்.
இதன்பேரில் கூடுதல் தகவல் தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டு இச்சம்பவம் நடந்ததாகக் கூறி Cuddalore District Police சார்பாக, மீண்டும் ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளதையும் கண்டோம்.
இதன்படி, கடந்த 2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனம் ஒன்றில், கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் சகிதமாக, கடைக்குப் பொருள் வாங்க வந்த ஒரு குடும்பத்தினரை, சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி, வழக்குப் பதிவு செய்தனர். இதுபற்றிய வீடியோ அப்போதே சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது, தமிழ்நாட்டில் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது.
Vikatan l Minnambalam l Oneindia Tamil
எனவே, 2019ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து, தற்போதைய திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? ?
Fact Check By: Pankaj IyerResult: False
