
‘’சேலத்தில் 6 ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்த ஆசிரியை லட்சுமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இதேபோன்ற தகவல் ஏற்கனவே, சில ஆண்டுகள் முன்பாக, சமூக வலைதளங்களில் வெவ்வேறு பெண்களை வைத்து பகிரப்பட்டு வந்தது. அப்போது, நாமும் ஆய்வு செய்து, அந்த தகவல் தவறான ஒன்று என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம்.
Fact Crescendo Tamil Article Link
இதே தகவலை தற்போது வேறொரு பெண்ணின் புகைப்படத்துடன் சேர்த்து, மேற்கண்ட வகையில் மீண்டும் வதந்தி பரப்பி தொடங்கியுள்ளனர். அந்த புகைப்படத்தில் இருப்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆவார். ‘’நான் ஆசிரியை பணி செய்யவில்லை; எனது புகைப்படத்தை இவ்வாறு தவறாகப் பரப்புகிறார்கள்,’’ என்று அந்த பெண்மணி நம்மிடம் நேரடியாக, முறையிட்டுள்ளார்.


இதன்பேரில், இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், இந்த புகைப்படத்தை வாசகர்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:சேலத்தில் 6 ஏழை மாணவர்களை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை இவரா? மீண்டும் பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
