
‘’சீனாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் லாரி, கார் மற்றும் விமானங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’உலகை அழிக்க நினைத்த சீனாவில் வெள்ளம் ஏற்பட்டு, லாரி, கார், விமானம் என வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவில், ஏராளமான கார்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்படுவதைக் காண முடிகிறது. இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை நாம் பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் செண்டாய் விமான நிலையத்தில் சுனாமி தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதற்கான செய்திகள் கிடைத்தன.

செண்டாய் மட்டுமல்ல, ஜப்பானின் பல்வேறு பகுதிகளிலும் 2011ம் ஆண்டு சுனாமி தாக்குதலால் கடுமையான உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது. குறிப்பிட்ட வெள்ளை, மஞ்சள் நிறம் கலந்த ஹெலிகாப்டர் 2 வீடியோவிலும் உள்ளதை வைத்தே எளிதில் அடையாளம் காண முடிகிறது.
அதேசமயம், சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான காட்சிகள் வேறு ஒன்றாகும். அவற்றை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, 2011ம் ஆண்டு ஜப்பானில் எடுக்கப்பட்ட வீடியோவை சீனாவில் நிகழ்ந்த வெள்ளச்சேதம் என்று கூறி தற்போது மறுபகிர்வு செய்து வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:சீனாவில் வெள்ளம்; அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
