
‘‘மைதா மாவில் செயற்கை முந்திரி பருப்பு தயாரிக்கும் வட இந்தியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பாக, செயற்கையாக முந்திரி பருப்பு தயாரிக்கும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், எனவே யாரும் முந்திரி பருப்பை கடைகளில் வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டு ஒரு வதந்தி பரவியது. அப்போது, நாம் ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இதுபோலவே, தற்போது நாம் ஆய்வு மேற்கொண்டுள்ள வீடியோ பற்றிய செய்தியும் தவறான ஒன்றாகும். ஆம். அந்த வீடியோவில், செயற்கை முந்திரி தயாரிக்கும் குடிசைத் தொழில் பற்றியே காட்டுகின்றனர். அதில் தயாரிக்கப்படும் செயற்கை முந்திரி, பிஸ்கெட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாகும். வட இந்தியாவில் இந்த வகை நொறுக்குத் தீனி பிரபலமான ஒன்றாகும்.
Spoons of Indore என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ முதலில், வெளியாகியுள்ளது. அதனை எடுத்தே பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர்.

kaju biscuits என்று கூகுளில் தேடினால், இதுபற்றி நிறைய புகைப்படங்கள், வீடியோக்களை காணலாம்.
எனவே, முழு உண்மை புரிந்துகொள்ளாமல், செயற்கையாக முந்திரி பருப்பு தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மைதாவில் முந்திரி பருப்பு தயாரிக்கும் வட இந்தியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
