கர்நாடகாவில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை எடுத்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று பரப்பும் விஷமிகள்!

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ் பிடித்து இழுத்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போலவும், இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “போலீசாரின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ். பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியான சோகம். குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியைப் பிடித்து இழுத்த போலீஸ் பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியான சோகம், குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம் #பாதுகாப்பில்லா_திமுகமாடல் #Resign_Stalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியை போலீசார் தடுத்த நிறுத்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக தந்தி டிவி-யில் நியூஸ் கார்டு, செய்தி வெளியிட்டிருந்தனர். ஆனால், அந்த நியூஸ் கார்டை மட்டும் எடுத்து, தமிழ்நாட்டில் இந்த சம்பவம் நடந்தது போல சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நியூஸ் கார்டிலேயே கர்நாடகா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பார்த்ததும் கர்நாடகா என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் அது இருந்தது. ஆனாலும், அவர்கள் கர்நாடகா என்று குறிப்பிட்டே நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளனர். ஆனால், வதந்தி பரப்பியே தீர வேண்டும் என்ற நோக்கில் சிலர் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போன்று பதிவிட்டுள்ளனர்.

முதலில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தோம். செய்தியில் ஹேஷ்டேகில் ஆங்கிலத்தில் கர்நாடகா என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால் இந்த நியூஸ் கார்டுக்கு கமெண்ட் செய்த சிலர் கூட தமிழ்நாட்டில் நடந்தது போன்று தமிழ்நாடு காவல்துறையை விமர்சித்துப் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 

இது தொடர்பாக வெளியான செய்தியை தேடி எடுத்தோம். அதில், கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அசோக் – வாணி ஆகியோரின் மகள் ஹிருதீக்ஷாவை நாய் கடித்ததால் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது போக்குவரத்து காவலர்கள் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்து அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். அசோக் ஹெல்மெட் அணியாததால் அவரை பிடிக்க முயற்சி செய்த போது பைக் தடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில், சிறுமி உயிரிழந்ததாக” குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive

நியூஸ் கார்டிலேயே கர்நாடகா என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகாவில் இருந்து வெளியான செய்திகளும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளன. ஆனால், வதந்தி பரப்ப வேண்டும், தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் இந்த சம்பவம் தி.மு.க ஆட்சியில் நடந்தது என்றும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வதந்தி பரப்பி வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

கர்நாடகாவில் குழந்தை பலியான சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போல தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கர்நாடகாவில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை எடுத்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று பரப்பும் விஷமிகள்!

Written By: Chendur Pandian  

Result: False

Leave a Reply