‘வாக்குப் பதிவு அறைக்குள் இயந்திரத்தை உடைத்த நபர்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘’ வாக்குப் பதிவு அறைக்குள் இயந்திரத்தை உடைத்த நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ எல்லா நேரங்களிலும் அதிகார வர்க்கம் செய்கின்ற கேடுகெட்ட செயலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
சாமானிய மக்கள் வெகுண்டெழுந்தால்.....,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பார்ப்பதற்கு, 2024 மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோ போன்றுள்ளதால், பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இது கடந்த 2023ம் கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று, தெரியவந்தது.
கர்நாடகாவின் சாமுண்டேஸ்வரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஹூட்டகல்லி வாக்குச் சாவடியில் சிவமூர்த்தி (48) என்ற நப வாக்குச் சீட்டுக் கட்டுப்பாட்டுக் கருவியை உடைத்தா என்றும், ஐபிசி பிரிவு 84 இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெயவகறது.
The Hindu Link l Star of Mysore Link
மேலும், இந்த சம்பவத்தை விமர்சித்து, ஆந்திராவைச் சேர்ந்த Sakshi TV கூட அப்போதே செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதனையும் ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, 2023ம் ஆண்டு கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை எடுத்து, 2024 மக்களவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி, சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘வாக்குப் பதிவு அறைக்குள் இயந்திரத்தை உடைத்த நபர்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
Written By: Fact Crescendo TeamResult: Missing Context