உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’RSS வீட்டுக்கு கேடு BJP நாட்டுக்கு கேடு உபியில் காவிதுறையிடம் அடிவாங்கும் காவல்துறை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2024ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம், என்று தெரியவந்தது. 

இதன்படி, கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர், அதே பகுதியை சேர்ந்த முன்னாள் சேர்மேன் மகன் சாகர் என்பவரிடம் ஒரு சொத்து விவகாரம் தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, சாகர் அந்த காவலரை அடித்துள்ளார். இந்த வீடியோவை எடுத்து, உத்தரப் பிரதேச அரசியலுடன் தொடர்புபடுத்தி தற்போது பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

NDTV Link l Free Press Journal l Voice of Gulbarga l NBT 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISLEADING

Leave a Reply