‘’கேரளாவில் பர்தா அணியாத இந்துப் பெண்களை பேருந்திற்குள் விடமாட்டோம்’’ என்று முஸ்லீம்கள் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ *இது கேரளாவில் நேற்று நடந்த சம்பவம். 'பர்தா' அணியாத இந்து மத பெண்களாக இருந்தாலும் பேருந்தில்* *அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனர்.இப்போது இந்து பெண்களும் தலையை மறைக்க 'ஹிஜாப்' அணிந்த பின்னரே பொதுப் போக்குவரத்தில் மட்டுமே பயணிக்க முடியும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் பற்றி விவரம் தேடியபோது, நமது மலையாளம் மொழிப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் கட்டுரை ஒன்றை கண்டோம். அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Malayalam Link

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்ப்ளா பகுதியில் செயல்படும் Khansa Women's College (under Kannur University) மாணவிகள் தங்களது கல்லூரி முன்பாக உள்ள நிறுத்தத்தில் பேருந்துகள் சரியாக நிற்பதில்லை என்றும், ஒவ்வொரு நாளும் கால் கடுக்க நின்றாலும் இந்த நிலை மாறுவதில்லை என்றும் அவ்வப்போது புகார் எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில், சில நாட்கள் முன்பாக, அவ்வழியே நிறுத்தாமல் சென்ற பேருந்துகளை வழிமறித்து, மாணவிகள் ஏறியுள்ளனர். அப்போது, கல்லூரி மாணவிகளுக்கும் பேருந்தில் இருந்த இதர பயணிகளுக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவையே சிலர் மதச்சாயம் பூசி வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள் என்று தெரியவருகிறது.

இதுதொடர்பாக, நமது மலையாளப் பிரிவினர், சம்பந்தப்பட்ட KUMBLA POLICE STATION-ஐ தொடர்பு கொண்டு பேசி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘கேரளாவில் பர்தா அணியாத இந்துப் பெண்களை பேருந்திற்குள் விடமாட்டோம்’ என்று முஸ்லீம்கள் கூறினார்களா?

Written By: Fact Crescendo Team

Result: False