மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று மகிந்த ராஜபக்சே கூறினாரா?

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் – ராஜபக்சே,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழல் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, அவரது வீட்டை பொது மக்கள் சூறையாடியுள்ளனர். இது மட்டுமின்றி, ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலரது வீடுகளும், உடைமைகளும் சேதப்படுத்தப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

Dinamalar Link I News18 Tamil Link

இந்த சூழலில், ராஜினாமா செய்தபின், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ராஜபக்சே, ‘’இலங்கை மக்களை போன்றில்லாமல், பொருளாதார வீழ்ச்சியை பொறுத்துக் கொண்டு மோடியை இன்னமும் நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன்,’’ என்று கூறியதாக, மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.

உண்மையில், இது போலியான நியூஸ் கார்டாகும்.  பாலிமர் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, நாம் ஆய்வு செய்த நியூஸ் கார்டு பாலிமர் பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று மகிந்த ராஜபக்சே கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered