‘’தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். அதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலர் இந்த தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்த சம்பவம் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள லோதா அமரா குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வாகும். இதுபற்றி அப்பகுதி மக்கள், அந்த பெண் மீது கபுர்பாவ்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Navbharattimes Link

இதுதொடர்பாக, பத்திரிகையாளர் Ronak Kotecha விரிவான விளக்கம் அளித்து, வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

மேலும், Kapurbwadi காவல் நிலையம் தரப்பில் இதுபற்றி ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘’அந்த பெண் பஞ்சாப் இந்து. முஸ்லீம் என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற சந்தேகமும் உள்ளது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Times Now Marathi Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer

Result: Partly False