பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது என்று பாஜக-வின் நாராயணன் திருப்பதி கூறியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டுள்ளனர். அதில், "பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது. தனது தோல்விகளால், மக்களிடம் எழுந்துள்ள கோபத்திற்கு அஞ்சி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெறுப்பூட்டும் பேச்சை நாடியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்" என்று இருந்தது. நிலைத் தகவலில், "இது உண்மையா…? என்ன நாதஸ் திருந்திட்டானா 🤭😂" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை ட்விட்டரில் பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக இருக்கும் நாராயணன் திருப்பதி தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது போன்று சிலர் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர். நாராயணன் திருப்பதி இப்படி பதிவிட வாய்ப்பில்லை என்பதால் இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

முதலில் நாராயணன் திருப்பதியின் எக்ஸ் தள பக்கத்தைப் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று ஒரு பதிவை அவர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதன் ஒரு பகுதியை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தவறாகப் பகிர்ந்திருப்பதும் தெரிந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை அப்படியே எடுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, அதற்கு தன் சார்பில் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார். இந்த கருத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்று தன்னுடைய எக்ஸ் தள பதிவில் நாராயணன் திருப்பதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவின் ஒரு பகுதியை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தவறான புரிதல் ஏற்படும் வகையில் அதாவது நாராயணன் திருப்பதி பிரதமர் மோடியை விமர்சித்துவிட்டார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது என்று மு.க.ஸ்டாலின் கூறியதை விமர்சித்து பாஜக-வின் நாராயணன் திருப்பதி செய்த ட்விட்டை தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நரேந்திர மோடியின் பேச்சு கேவலமானது என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False