
‘’விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாத் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாந்த் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா
குடும்பமே பாஜக காலடில தான் கிடக்கு போல💦💦,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது 2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2023ம் ஆண்டு Amar Prasad Reddy அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் குறிப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு, ‘’ She is the biggest strength behind @actorvijay ,’’ தலைப்பிட்டுள்ளார்.
ஆனால், விஜய் கட்சி தொடங்கியது 2024ம் ஆண்டுதான். அதற்குப் பின் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் பிரசாரம் செய்ய கரூர் சென்றபோது, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி, 40க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் உலக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுடன், 2023ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள்.
எனவே, பழைய புகைப்படத்தை எடுத்து, வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:அமர் பிரசாத் ரெட்டி மற்றும் ஷோபா சந்திப்பு என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False


