வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை- உண்மை என்ன?

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

மேற்கண்ட வீடியோவில், ‘வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்களை இளைஞர் ஒருவர் போராடி காப்பாற்றி, கரை சேர்க்கிறார். அதன் பிறகு, கரையில் உள்ள மற்ற நபர்கள் அவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள்,’ ஆகிய காட்சிகளை காண முடிகிறது. இதனை பலரும் வெள்ளத்தில் சிக்கிய தனது குழந்தைகளை துணிச்சலுடன் மீட்ட தந்தை என குறிப்பிட்டு வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல, அந்த சிறுவர்களை மீட்டவர், அவர்களின் தந்தை அல்ல. அவர் கரையில்தான் நின்றுள்ளார். அவ்வழியே வந்த புகைப்படக்காரர் ஒருவரே வெள்ளத்தில் இறங்கி சிறுவர்களை துணிச்சலுடன் மீட்டுள்ளார். இந்த சம்பவம் ஓமன் நாட்டில்தான் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

sabah.com link

இன்னொரு விரிவான செய்திக் கட்டுரையும் ஓமனைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் காண முடிகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

TimesOfOman Article Link

எனவே, வைரல் நோக்கத்திற்காக, முழு உண்மை விவரத்தை மறைத்துவிட்டு, மகன்களை காப்பாற்றிய தந்தை, என்று கூறி மேற்கண்ட வீடியோவை பலரும் பகிர்கிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை- உண்மை என்ன?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Missing Context