துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் தங்க நகை மோசடி நடைபெற்றதா?

இந்தியா | India உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் நடைபெற்ற தங்க நகை மோசடி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *குவைத்தை* , தொடர்ந்து  *துபாயில்* நடந்த சோதனையிலும் *கல்யாண் ஜூவல்லரி* ல் உள்ள நகை களில் *_இரும்பு_* கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இந்த இரு நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லரிக்கு *_தடை_* விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது..

தங்கம் விற்கிற விலையில் இனி எந்த கடையிலும் தங்கத்தை நம்பி வாங்கமுடியாது.முன்பு செம்பு இப்போது இரும்பு..

எனவே இனி  *நகை வாங்க* எந்த கடைக்கு சென்றாலும் கையில் *காந்தத்தோடு( Magnet )* சென்று சோதனை செய்து வாங்குங்கள்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, சமூக வலைதளங்களில் பரவி வரும் குறிப்பிட்ட வீடியோவுக்கு, உடனடியாக, Kalyan Jewellers நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக, தெரியவந்தது.

இதன்படி, குறித்த வதந்தி வீடியோ கடந்த 2017ம் ஆண்டு முதலே பல்வேறு மொழிகளில் பகிரப்பட்டு வந்த ஒன்று. இதனை பரப்பிய நபர்களை, 2018ம் ஆண்டே துபாய் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் இதே வதந்தியை புதிய செய்தி போன்று, சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று, Kalyan Jewellers அறிவுறுத்தியுள்ளது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Times Of India l The News Minute 

இறுதியாக, நாம் Kalyan Jewellers தரப்பை தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முடிவு செய்தோம். அவர்களது Customer Care பிரிவை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய கஸ்டமர் கேர் நிர்வாகி, ‘’இது எங்களது நிறுவனத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கிடையாது. இணையதளத்தில் காணப்படும் ஏதோ ஒரு வீடியோவை எடுத்து, எங்களது நிறுவனத்தின் பேரில் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள். நாங்கள் ஏற்கனவே இந்த விவகாரத்தில் போலீஸ் புகார் செய்துள்ளோம். கூடுதல் சட்ட நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் அதனையும் நாங்கள் மேற்கோள்வோம்,’’ என்று தெரிவித்தார்.  

ஏற்கனவே போலீஸ் நடவடிக்கை எடுத்த நிலையில், உண்மை தெரியாமல் மீண்டும் பழைய வதந்தியை எடுத்து, புதியது போன்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் மறுபகிர்வு செய்கிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையில் தங்க நகை மோசடி நடைபெற்றதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

Leave a Reply