
‘’சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக விளங்கும் திருமாவளவன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சிதம்பரத்தில் தெள்ளவாரி பிள்ளையாக திருமாவளவன் விளங்கி வருகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது. ஆம், குறிப்பிட்ட நியூஸ் கார்டில் இடம்பெற்றுள்ள ‘’தெள்ளவாரி’’ என்று வார்த்தையின் ஃபாண்ட் மட்டும் வேறுபட்டதாக உள்ளதைக் காண முடிகிறது.
இதுபற்றி புதிய தலைமுறை ஆசிரியர் குழு தரப்பில் கேட்டபோது, ‘’எங்களது பெயரில் வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
உண்மையான நியூஸ் கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தெள்ளவாரி பிள்ளையாக விளங்கும் திருமாவளவன் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
