இலங்கையின் நிலை இந்தியாவிற்கும் வரும் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இலங்கையில் ஏற்பட்டதைப் போன்று விரைவில் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலரும் உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்வதற்காக, இதுபற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரை பயன்படுத்தி யாரோ வேண்டுமென்றே அவர்களது சொந்த கருத்தை வைத்து இத்தகைய போலிச் செய்தியை தயாரித்துள்ளனர்,’’ எனக் குறிப்பிட்டார்.

எனவே, இந்த செய்தி நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:இலங்கையின் நிலை இந்தியாவிற்கும் வரும் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False