
‘’சொந்த நாட்டில் படிக்காமல் உக்ரைன் சென்ற மாணவர்களை என் தோளிலா ஏற்றிக் கொண்டு இந்தியா வர முடியும்,’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
இதேபோல, நியூஸ்7 தமிழ் லோகோவுடன் இதே செய்தியை சிலர் பகிர்வதையும் காண முடிந்தது.

உண்மை அறிவோம்:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு படிக்கச் சென்ற ஏராளமான இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில், இந்திய மாணவர்களை மீட்க, மத்திய அரசு (பாஜக) திருப்திகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டு, பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த பின்னணியில், மேற்கண்ட வகையில் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி பலரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். உண்மையில், இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசவில்லை. அவரது பெயரில் சிலர் இப்படி வதந்தி பரப்பியுள்ளனர். இதுபற்றி நிர்மலா சீதாராமனே நேரடியாக, ட்விட்டரில் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். அதனை ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நிர்மலா சீதாராமன் பேசாத ஒன்றை எடுத்து, உண்மை போல வேண்டுமென்றே சிலர் உள்நோக்கத்துடன் பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தோளிலா ஏற்றி வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
