
‘’பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்? இவனுக்கு அங்க என்ன வேலை.???🤔🤧 நடுவில் ஏன் வந்தார்? தேர்தல் கமிசனர் அடுத்த நிதி அமைச்சரா?,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதற்கும், சமீபத்திய பட்ஜெட் 2025-26 தாக்கலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.
ஆம், ராஜிவ் குமார் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி முதல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்து வருகிறார். ஆனால், அதற்கு முன்பாக, 2019 ஜூலை முதல் 2020 பிப்ரவரி மாதம் வரை இந்திய நிதித்துறையின் செயலராக இருந்தார். அப்போது, 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். அந்த பட்ஜெட் 2020, பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, அவர் நிர்மலா சீதாராமனுடன் அவைக்கு சென்ற புகைப்படத்தை எடுத்து, தற்போது சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்.
எனவே, 2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, ராஜிவ் குமார் இந்திய நிதித்துறையின் செயலராக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே, தற்போது 2025ம் ஆண்டில் எடுக்கப்பட்டது போன்று குறிப்பிட்டு, தவறான தகவல் பரப்பப்படுவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பட்ஜெட் தாக்கல் செய்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்றம் வந்தாரா?
Written By: Pankaj IyerResult: Misleading
