டீ ரூ.1, பிரியாணி ரூ.8… நாடாளுமன்றத்தில் உணவு விலை என்று பரவும் பழைய தகவல்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

நாடாளுமன்றத்தில் தேநீர் ரூ.1க்கும், பிரியாணி ரூ.8க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நாடாளுமன்றம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா…?  தேநீர்.  1.00 .ரூ,  சூப்.  5.50.  கொட்டை கறி.  1.50,  மதிய உணவு.  2.  00,  சப்பாத்தி.  1.00.  கோழி.  24.  50,  கேக்.  4 .00,  பிரியாணி.  8 .00.  மீன் குழம்பு.  13.  00, இவை அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏழைகளுக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் இவை கிடைக்கும் இடம் இந்திய நாடாளுமன்ற கேன்டீன் …..  

இந்த ஏழைகளின் மாதச் சம்பளம் வருமான வரி தவிர்த்து ரூ.80,000/-.  மேலும் அதை மும்மடங்காக உயர்த்தும் முடிவில் உள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயனாகப் பெறப்பட்ட மேற்கண்ட தகவல்களைப் பற்றி அனைத்து குடிமக்களும் அறிந்திருக்க வேண்டும்.  ஜோக்ஸ் போன்றவற்றை ஃபார்வேர்ட் செய்யும் போது அத்தகைய அறிவை ஃபார்வர்ட் செய்ய மறக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பாலக்கரை சக்திவேல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒரு காலத்தில் நாடாளுமன்ற கேண்டீனில் உணவுப் பொருட்கள் விலை குறைவாக இருந்தது உண்மைதான். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது. கேண்டீனுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் தேநீர் ரூ.1க்கும், பிரியாணி ரூ.8க்கும் விற்பனையாகிறது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive

நாடாளுமன்ற கேன்டீன் உணவுப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பான செய்தியை தேடி எடுத்தோம். 2021 ஜனவரி 27ம் தேதி இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. நாடாளுமன்ற மக்களவை செயலகம் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையின் புகைப்படத்தையும் அதில் வைத்திருந்தனர். உணவுப் பொருட்களின் உயர்த்தப்பட்ட விலையை குறிப்பிட்டிருந்தனர். சிக்கன் பிரியாணி ரூ.100 என்றும், மட்டன் பிரியாணி ரூ.150 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பட்டியலில் டீ, காபி இடம் பெறவில்லை. 

உண்மைப் பதிவைக் காண: economictimes I Archive

இது தொடர்பாக தேடிய போது 2016ம் ஆண்டிலேயே டீ, காபி விலை உயர்த்தப்பட்டது என்ற செய்தி கிடைத்தது. அதன்படி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தேநீர் விலை 2016ல் ரூ.5 எனவும் ரூ.1.50-க்கு விற்கப்பட்ட காபி ரூ.5 எனவும் விலை உயர்த்தப்பட்டதாக செய்தி கிடைத்தது.

இதன் மூலம் தற்போது நாடாளுமன்ற கேண்டீனில் எம்.பி-க்களுக்கு மிகவும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாடாளுமன்ற உணவகத்தில் மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டீ ரூ.1, பிரியாணி ரூ.8… நாடாளுமன்றத்தில் உணவு விலை என்று பரவும் பழைய தகவல்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False