‘’நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’’ என்று அவரது சகோதரர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம்… பிரஹலாத் மோடி (நரேந்திர மோடி சகோதரர்)’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் தகவல் தேடியபோது, இது கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு வதந்தி என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பதையும் கண்டோம்.

Dainik Bhaskar Link l India Link

இதன்பேரில், நாமும் பிரஹலாத் மோடியை அவரது செல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டோம்.

நம்மிடம் பேசிய அவர், ‘’இந்த வதந்தி கடந்த பல ஆண்டுகளாகவே பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதன் முதலாக, அமர் உஜாலா ஊடகத்திற்கு நான் இவ்வாறு பேட்டி அளித்ததாகக் கூறி தகவல் பரவியது. அப்போதே நான் அந்த ஊடகத்தின் தலைமை செய்தி ஆசிரியரை விளக்கம் கேட்டேன். அவரும் இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி என்று கூறியதோடு, இதுபற்றி போலீசிலும் புகார் செய்தார். ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்து, மீண்டும் இதே வதந்தியை வேறொரு மொழியில் பரப்புவதைக் கண்டால், வேதனையாக உள்ளது,’’ என்றார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’ என்று அவரது சகோதரர் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False