பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தரும்படி சீமான் கேட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தருக,’’ என்று சீமான் கேட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ பொங்கல் பரிசுத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையைப் பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என சீமான் வேண்டுகோள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

ஏற்கனவே சில நாட்கள் முன்பாக, தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்குத் தரும்படி சீமான் கேட்டதாக, ஒரு தகவல் பகிரப்பட்டது. இது போலியான செய்தி என்று நாம் அப்போது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட்செக் வெளியிட்டிருந்தோம். 

Fact Crescendo Tamil link

இந்நிலையில் இதே நியூஸ் கார்டை எடிட் செய்து, மீண்டும் புதியதாக ஒரு வதந்தியை பரப்பியுள்ளனர். ஆனால், இதுபோன்ற எந்த செய்தியும் புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை. மேலும், நாம் தமிழர் கட்சி தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தரும்படி சீமான் கேட்டாரா?

Written By: Fact Crescendo Team 

Result: False