அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ போஸ்டரால் புதுக்கோட்டையில் பரபரப்பு. பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைக்க உள்ளதாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அனைத்து கடைகளும் மூடப்படும் புதுக்கோட்டை வணிகர் சங்கம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

Facebook Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ‘’என் மண் என் மக்கள்’’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவரை கேலி செய்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலர் தகவல் பரப்புகின்றனர். 

இந்த வரிசையில் பகிரப்படும் வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டும்…

ஆம், ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை’’ என்று புதிய தலைமுறையே மறுப்பு தெரிவித்துள்ளது. 

அவர்கள் வெளியிட்ட மறுப்பு இதோ… 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Written By: Fact Crescendo Team 

Result: False