
‘‘அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்’’, என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக, எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவின் புதிய தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டதாக, சில மாதங்களுக்கு முன் ஒரு வதந்தி பரவியது. நாம் கூட அதுபற்றி ஃபேக்ட்செக் செய்திருந்தோம்.
அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேற்கண்ட தகவலும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகளிடமும், எடப்பாடி பழனிசாமி அலுவலகம் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வு செய்த தகவல் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
