‘’ அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த செய்தி உண்மையா என்று நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு தரப்பில் விசாரித்தபோது, இது போலியான செய்தி என்று கூறியதோடு, உண்மையான நியூஸ் கார்டின் லிங்கை நமக்கு கொடுத்தனர்.

அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

உண்மையான செய்தி மற்றும் போலியான செய்தியையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, உண்மையான செய்தி வேறொன்றாக இருக்க, அதனை எடிட் செய்து, இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும் என்று சீமான் பேசினாரா?

Written By: Fact Crescendo Team

Result: Altered