‘’ இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’உத்தரகண்ட் மாநிலம் தேவதை பூமி இங்கு முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் வாழக்கூடாது... இந்தியா இந்துநாடாக வேண்டும் என ஊடகங்களில் கூறிய மேற்கண்ட சங்கி சாமியார் இலங்கை சொகுசு விடுதியில் விபச்சார அழகிகளுடன் இருந்த போது சிக்கினான்.. இவனை போன்ற கயவர்களை நம்பும் அப்பாவிகளே இனியாவது உணருங்கள்...,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Facebook Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த செய்தி உண்மையா என்று நாம் விவரம் தேடியபோது, இது நம் அண்டை நாடான இலங்கையில் நிகழ்ந்த சம்பவம் என்று தெரியவந்தது.

ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

newswire.lk l srilankamirror link

இதுபற்றி நமது இந்தி மொழிப் பிரிவினரும் ஏற்கனவே விரிவான ஃபேக்ட் செக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Fact Crescendo Hindi Link

எனவே, உண்மையான செய்தி வேறொன்றாக இருக்க, அதனை இந்தியாவில் நடந்தது போன்று வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியாரா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading