
‘‘சிபிஐ விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’7 மணிநேர சிபிஐ விசாரணை முடிந்து திரும்பிய விஜய்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் முகத்தை மூடிக்கொண்டு செல்வது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்து, பகிரப்படும் நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது. ஆம், உண்மையான செய்தியில் விஜய் முகம் எதுவும் மூடவில்லை.

இதுதொடர்பாக, சன் டிவி ஆசிரியர் குழுவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:சிபிஐ விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


