
‘’இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது – தினத்தந்தி கருத்துக் கணிப்பு ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக, தினத்தந்தி சர்வே வெளியிட்டதாக, எதுவும் செய்தி உள்ளதா என்று விவரம் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் காணக் கிடைக்கவில்லை. இதுபற்றி கூடுதல் விவரம் அறிய நாம், தந்தி டிவியின் ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டோம். அவர்கள், ‘’இப்படி எந்த கருத்துக் கணிப்பும் நாங்கள் வெளியிடவில்லை. எங்களது பெயரில் பகிரப்படும் வதந்தி இது,’’ என்றனர்.
தொடர்ந்து நாம் பேசுகையில், ‘’ரங்கராஜ் பாண்டே தந்தி டிவி செய்தி ஆசிரியராக இருந்தபோது இவ்வாறு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனை பலரும் ‘தந்தி டிவி’ ஆசிரியர் கருத்து என்று பரப்ப தொடங்க, நாள் போகப் போக ‘தந்தி டிவி’ கருத்து, ‘தந்தி கருத்து’, ‘தினத்தந்தி கருத்துக் கணிப்பு’ என்று பரப்பி வருகின்றனர். உண்மையில் தினத்தந்தி நியூஸ்பேப்பர் வரலாற்றில் இப்படி எந்த கருத்துக் கணிப்பும் வந்ததில்லை,’’ என்று குறிப்பட்டனர்.
இதற்கு ஆதாரமாக ஒரு பேஸ்புக் பதிவை கீழே இணத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதா?- தினந்தந்தி பெயரில் பரவும் வதந்தி.
Fact Check By: Fact Crescendo TeamResult: False
