
‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை,’’ என்று எஸ்.பி. வேலுமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை’’ சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றிய நிருபர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், நாம் இதுபற்றி எஸ்.பி. வேலுமணி தரப்பில் விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’இதுபோன்ற எந்த கருத்தும் சமீபத்தில் வேலுமணி அவர்கள் தெரிவிக்கவில்லை. இது எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே பரப்பும் வதந்தி,’’ என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தப்படியாக, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவரும், ‘’இது தந்தி டிவி பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று உறுதி செய்தார்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ்கார்டு, உண்மையானதல்ல, என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:வெளிமாநில வாக்காளர்கள் பற்றி எஸ்.பி. வேலுமணி கருத்து கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
