
‘’கொரோனா வைரஸ் போடப்பட்ட நாடுகளில் இந்தியா உலகளவில் முதலிடம்,’’ என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை நமது வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர்.
இதே தகவலை, பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
இந்தியா புதிய மைல்கல் எட்டியது, என்று கூறி, ஜூன் 28 அன்று தமிழ்நாடு பாஜக சார்பாக, ட்விட்டரில் ஒரு பதிவு பகிரப்பட்டது. அதில், உலகிலேயே அதிக பேருக்கு (32.36 கோடி) கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடு இந்தியாதான் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுத்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘’உலகிலேயே கொரோனா தடுப்பூசி குறைவாக போட்டுள்ள நாடு இந்தியாதான்; ஆனால், அதனை அப்படியே மறைத்து, பாஜகவினர் வதந்தி பரப்புகின்றனர்,’’ என்று கூறியிருந்தார். அந்த ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
ஜோதிமணி கூறியுள்ளதே உண்மையாகும். ஏனெனில், உலக அளவில் இதுவரை மொத்தம் சுமார் 300 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அடுத்தப்படியான இடத்தில் இந்தியா உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

NYTimes Link I ourworldindata.org Link I statista.com Link
அதேசமயம், இந்தியாவில் ஜூன் 30, 2021 நிலவரப்படி 33 கோடியே 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எனவே, உலக அளவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா முதலிடம் என்று தமிழ்நாடு பாஜக தவறான தகவலை பகிர்ந்துள்ளது; அதனை மற்றவர்களும் சரிபார்க்காமல் ஷேர் செய்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:உலகிலேயே அதிகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட நாடு இந்தியாவா?
Fact Check By: Pankaj IyerResult: False
