
மதுரை மாநாடு பற்றி நிருபர் கேள்வி எழுப்ப, மாநாடு படம் எடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி கூறி சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நிருபர் ஒருவர் நடிகர் விஜய்யின் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளிக்காமல் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நிரூபர் :- மதுரை மாநாடு பத்தி சொல்லுங்க
SAC :- மாநாடு பத்தி இவர் கிட்ட கேளுங்க 🤣🤣
விஜய் அப்பன் கால்ல விழுந்து மதுரை மாநாட்டுக்கு கூட்டிட்டு வந்து இருப்பான் போல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
உண்மை அறிவோம்:
சமீபத்தில் மதுரை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா கலந்துகொண்டனர். நடிகர் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் மோதல் இருந்து வந்தது. இந்த சூழலில் மாநாட்டில் அவரை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததை வெளிப்படுத்தும் வகையில் நிருபர்களின் கேள்விக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்தார் என்று வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவில் மதுரை மாநாடு என்று நிருபர் கூறவில்லை. எனவே சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம். இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024ம் ஆண்டில் இந்த வீடியோ வெளியாகி இருப்பது தெரிந்தது. விஜய் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்தியபோது இந்த பேட்டி வெளியாகி இருப்பது தெரிந்தது.
2024ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிருந்தனர். அதற்குத்தான் “மாநாடு பற்றி அவர்கிட்ட கேளுங்க, மாநாடு படத்தை அவர் தான் எடுத்தார்” என நைஸாக வெங்கட் பிரபுவை கோர்த்து விட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். இது தொடர்பாக 2024ம் ஆண்டு வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: filmibeat.com I Archive I samayam.com I Archive
இதன் மூலம் 2024ம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியை, 2025 மதுரை மாநாட்டுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
2024ம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியை 2025 ஆஸ்டில் நடந்த தவெக மதுரை மாநாட்டுக்குப் பிறகு என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:மதுரை தவெக மாநாடு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் அதிருப்தி தெரிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False


