
‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் விசய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் #பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் #விசய்…!’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
இதன்படி, கடந்த 2024ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25ம் தேதியன்று, வேலுநாச்சியார் நினைவு தினத்தில் அவரது உருவப்படத்திற்கு தவெக., தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேற்கண்ட புகைப்படத்தை வேண்டுமென்றே எடிட் செய்து, சிலர் சமூக வலைதளங்களில் விஜய் பற்றி வதந்தி பரப்புதிறார்கள்.
இதுதவிர பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் எதுவும் பதிவிட்டுள்ளாரா என்று தகவல் தேடினோம். அப்போது, அவரது X வலைதள பக்கத்தில் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்திருந்ததைக் கண்டோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:சூரியன் போட்டோவுக்கு மாலையிட்டு, பொங்கல் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
