
‘’மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story ரவி அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்படும் வதந்தி, என்று தெரியவந்தது.
ஆம், வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் பற்றி சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வருண்குமார் ஐபிஎஸ் சட்ட ரீதியாக, நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இத்தகைய சூழலில், வருண்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, மேற்கண்ட வகையில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.
வருண்குமார் ஐபிஎஸ் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்றை எடுத்தே, இவ்வாறு எடிட் செய்து, பரப்புகிறார்கள்.
கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் வருண்குமார் ஐபிஎஸ்., அவர்களது அலுவலகத்திலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:திருச்சி டிஐஜி வருண்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தாரா?
Written By: Pankaj IyerResult: False
