கிறிஸ்தவ பள்ளியின் மதவெறி என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal தேசிய அளவில் I National

அய்யப்ப மாலை அணிந்து வந்த மாணவனைப் பள்ளிக்குள் அனுமதிக்காமல் கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் அத்துமீறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

கிறிஸ்தவ பள்ளிக்குள் அய்யப்ப மாலை அணிந்து வந்த மாணவன் ஒருவனை வெள்ளை சேலை அணிந்த இரண்டு பெண்கள் அனுமதிக்க மறுப்பது போலவும், பொது மக்கள் திரண்டு அவர்களுக்கு எதிராக போராடியது போலவும், கடைசியில் போலீஸ் வந்து பள்ளிக்கு ஆதரவாக நடந்து கொண்டது போன்றும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “பாரத புண்ணிய பூமியில் எச்ச சோறு மதமாறி பாவாடைகளின் மதவெறியை பாருங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிறிஸ்தவ பள்ளியில் இந்து மாணவரைத் தாக்கியதாக வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கும் போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்காக எடுக்கப்பட்ட நாடக வீடியோ என்று தெரிகிறது. வீடியோவின் கடைசியில் இது விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட நாடகம். இதில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை என்று இருந்தது.

Archive

ஆனால் அதைப் பற்றி எல்லாம் துளியும் கவலையின்றி, கிறிஸ்தவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வீடியோ ஸ்கிரிப்டட் வீடியோ என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். ஏற்கனவே, இது போன்று ஸ்கிரிப்டட் வீடியோக்கள் பற்றிக் கட்டுரை வெளியிட்டிருந்ததால், அந்த குறிப்பிட்ட சேனலின் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம்.

அப்போது, 2024 டிசம்பர் 30ம் தேதி இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.  அதில், “Disclaimer: Thank you for watching! Please note that this page features scripted dramas, parodies, and awareness videos. These short films are created for entertainment and educational purposes only. All characters and situations depicted in the videos are fictional and intended to raise awareness, entertain, and educate.These videos are created with respect for all religions and beliefs, promoting unity and mutual understanding” என்று குறிப்பிட்டிருந்தனர். 

அதாவது, “பொறுப்பு துறப்பு: இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நாடகங்கள் விழிப்புணர்வு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த நாடகங்கள் அல்லது குறும்படங்கள் பொழுதுபோக்கு, விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. வீடியோவில் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. மக்களை மகிழ்விக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் உருவாக்கப்பட்டவை. மக்களின் மதங்கள் மற்றும் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, ஒற்றுமையை உருவாக்க புரிதலை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்கிரிப்டட் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்ட வீடியோவை இரு மத மக்களுக்கு இடையே பிரிவை, மோதலை உருவாக்கும் வகையில் விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கிறிஸ்தவ பள்ளியில் அய்யப்ப மாலை அணிந்த மாணவன் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்று எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோவை உண்மை சம்பவம் போல் சமூக ஊடகங்களில் பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கிறிஸ்தவ பள்ளியின் மதவெறி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False