‘’அண்ணாமலை ஒரு மனநோயாளி’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ அண்ணாமலை ஒரு மனநோயாளி. தூக்கத்தில் கனவு காண்பது இயல்பு. ஆனால் நடைப்பயணத்தில் நடக்கும்போதே கனவு காண்பது அரிய வகை நோய். அண்ணாமலை ஒரு மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் பற்றி நாம் தகவல் தேடியபோது, தந்தி டிவி இவ்வாறு எந்த செய்தியும் வெளியிடவில்லை, என்று தெரியவந்தது.

அடுத்ததாக, இதுபற்றி நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’இது எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தனர்.

அடுத்தப்படியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் விசாரித்தபோது, ‘’இவ்வாறு அவர் எங்கேயும் பேசவில்லை,’’ என்றனர்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘அண்ணாமலை ஒரு மனநோயாளி’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False