‘சாரி வேண்டாம்… சாரி கேளு’ என்று முரணாக விஜய் பதாகை வைத்திருந்தாரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

சாரி வேண்டாம் நீதி வேண்டும், சாரி கேள் என்று தவெக தலைவர் விஜய் பதாகை வைத்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x post I Archive

நடிகர் விஜய் பதாகை ஒன்றை வைத்திருக்கும் புகைப்படம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ” Sorry வேண்டாம். நீதி வேண்டும். Sorry கேளு” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித்குமார் என்பவர் கடந்த ஜூன் மாதம் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். இந்த மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இதில் பங்கேற்றார். போராட்டத்தின் போது நீதி கேட்டு நடிகர் விஜய் வைத்திருந்த பேனரில் சாரி வேண்டாம் என்றும் சாரி கேளு என்றும் முரண்பாடாக எழுதப்பட்டிருந்தது போன்ற புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

போராட்டத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அவற்றைப் பார்த்தோம். அதில் அப்படி எந்த ஒரு காட்சியும் இல்லை. அவர் வைத்திருந்த பதாகையில், “Sorry வேண்டாம், நீதி வேண்டும்!” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தெளிவானது.

Archive

செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைத் தவிர்த்து தவெக அதிகாரப்பூர்வ தளங்கள், சமூக ஊடக பக்கங்களில் வெளியான பதிவுகளைப் பார்த்தோம். தவெக அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் போராட்டத்தின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில் விஜய் கையில் பதாகை வைத்திருக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.

முடிவு:

சாரி வேண்டாம், சாரி கேளு என்று முரண்பாடான பதாகை வைத்திருந்த நடிகர் விஜய் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:‘சாரி வேண்டாம்… சாரி கேளு’ என்று முரணாக விஜய் பதாகை வைத்திருந்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply